Sunday, June 29, 2008
எழுத்தாளர் சுஜாதாவும் அனாமிகாவும்
சுஜாதா
தமிழ் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்த 'கதா'நாயகன்.அறிவியலை
தமிழ் எழ்த்துலகிற்கு இழுத்து வந்தவன்.
சுனாமியில் கரைந்து போன எங்கள் மகள் அனாமிகா பற்றி ஜூனியர் விகடன் மூலம் அறிந்து கொண்ட சுஜாதா அவர்கள் ,அவள் நினைவில் 'அனாமிகா'
என்ற கதையை ஆனந்தவிகடனில்
'கற்றதும் பெற்றதும்' தொடரில் பதிவு
செய்திருந்தார்.தொடர்ந்து அனாமிகாவின்'தேவதைக் கிறுக்கல்கள்' 'சின்னதேவதை' ஆகிய வெளியீடுகளை ஆனந்தவிகடனில் அறிமுகப்படுதியிருந்தார்.தமிழகம் சென்றிருந்த போது அவரை சந்தித்த நினவுகள் என்றும் மறக்க முடியாத பதிவுகளாய் உள்ளன.
எங்கள் மகள் அனாமிகாவின் நினைவுகளோடு சுஜாதாவும் கலந்திருக்கிறார்.
ஆவாரம் பூப்போல்
Wednesday, June 18, 2008
இறுதிச் சொல்
பூத்திகளும் பொன்மேனிப் புனிதமலரே
பூவெறியும் உனது
மென் சொற்களின் தேனுண்டவர் நாம்
நீ உமிழ்ந்த இறுதிச்சொல்
எந்த அலையில் மிதக்கிறது சொல்
வாழ்வின் உட்பொருள் தேடி
முகக்கும் உனதறிவின்
வாயுண்டு உமிழ்ந்த சொல்லின்
பொருள் என்ன
தெற்கு மூலையில்
யமன் திசையில்
காத்திருக்கும் எங்களுக்கு
உன்
சேதியினைச் சொல்லிவிடு.
சு.வில்வரெத்தினம்
Anamika Anjali 2007 London
Monday, June 16, 2008
இரண்டாம் ஆண்டு நினைவு 2006 லண்டன்
Sunday, June 15, 2008
நினைவலைகள்
அனாமிகா கவிதைகள்
வாழ்க்கை
வாழ்க்கை
என்ன இது?
இதற்கு அர்த்தமென்ன?
ப்ற்க்குமுன் எங்கிருந்தோம்?
இறந்தபின்பு எங்கே போவோம்?
எப்பொழுது இறப்போம்?
வாழ்க்கை
என்ன இது?
இதற்கு அர்த்தமென்ன?
ப்ற்க்குமுன் எங்கிருந்தோம்?
இறந்தபின்பு எங்கே போவோம்?
எப்பொழுது இறப்போம்?
Saturday, June 14, 2008
Subscribe to:
Posts (Atom)