Wednesday, June 18, 2008

இறுதிச் சொல்


பூத்திகளும் பொன்மேனிப் புனிதமலரே
பூவெறியும் உனது
மென் சொற்களின் தேனுண்டவர் நாம்
நீ உமிழ்ந்த இறுதிச்சொல்
எந்த அலையில் மிதக்கிறது சொல்
வாழ்வின் உட்பொருள் தேடி
முகக்கும் உனதறிவின்
வாயுண்டு உமிழ்ந்த சொல்லின்
பொருள் என்ன
தெற்கு மூலையில்
யமன் திசையில்
காத்திருக்கும் எங்களுக்கு
உன்
சேதியினைச் சொல்லிவிடு.
சு.வில்வரெத்தினம்

No comments: