பூத்திகளும் பொன்மேனிப் புனிதமலரே
பூவெறியும் உனது
மென் சொற்களின் தேனுண்டவர் நாம்
நீ உமிழ்ந்த இறுதிச்சொல்
எந்த அலையில் மிதக்கிறது சொல்
வாழ்வின் உட்பொருள் தேடி
முகக்கும் உனதறிவின்
வாயுண்டு உமிழ்ந்த சொல்லின்
பொருள் என்ன
தெற்கு மூலையில்
யமன் திசையில்
காத்திருக்கும் எங்களுக்கு
உன்
சேதியினைச் சொல்லிவிடு.
சு.வில்வரெத்தினம்
No comments:
Post a Comment